இலங்கையில் அரச பாடசாலைகளில் முதலாம் ஆண்டுக்கான பிள்ளைகளை உள்வாங்குவதற்கான விண்ணப்பங்கள் இவ்வருடம் பாரியளவில் குறைந்துள்ளதாக அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு றோயல் கல்லூரியிலும் முதலாம் ஆண்டுக்கான அனுமதிக்காக சுமார் 1500 விண்ணப்பங்கள் கிடைப்பதாகவும், ஆனால் இம்முறை ஐந்நூறு விண்ணப்பங்கள் மாத்திரமே கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
ஹொரணை பிரதேசத்தில் உள்ள பல பிரபல பாடசாலைகளுக்கு முதலாம் வருடத்தில் பெறப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்க முயல்வது தெரிகிறது என்றார். இதற்குக் காரணம் இந்நாட்டின் கல்வி முறையின் மீதான பெற்றோர்களின் நம்பிக்கைத் தளர்ச்சியே என அவர் மேலும் தெரிவித்தார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.