கொழும்பு - கோட்டை தொடருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தொடருந்தின் கழிவறையில் கைக்குழந்தையை விட்டுச் சென்றமை தொடர்பில் குறித்த தாயார் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் தனது வாக்குமூலத்தில் குழந்தையை யாராவது எடுத்துச் சென்று பத்திரமாக வளர்ப்பார்கள் என்று நினைத்து அப்படி விட்டுச் சென்றதாக குறித்த பெண் பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், குழந்தையின் பெற்றோரான தம்பதியினர் 26 வயதுடைய திருமணமாகாதர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.
பண்டாரவளை மற்றும் கொஸ்லந்த பொலிஸ் நிலையங்களால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு 7 மணியளவில் மட்டக்களப்புக்கு புறப்படவிருந்த மீனகயா தொடருந்தில் இருந்து கைவிடப்பட்ட இந்த குழந்தையை பயணிகளும் தொடருந்து அதிகாரிகளும் கண்டுபிடித்தமை குறிப்பிடத்த க்கது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.