வாவியில் குளித்துக் கொண் டிருந்த பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றத்துக்காக ஒருவருக்கு கடூழிய சிறைத் தண்டனை விதித்தது அம்பாறை மேல் நீதிமன்றம்.
அம்பாறையில் ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் பெண் ஒருவர் தனது பணி முடிந்து வீட்டுக்கு திரும்பிய பின்னர், அருகிலிருந்த நீர் நிலையில் நீராடிக் கொண்டிருந்தார்.
அந்தச் சமயம், குற்றவாளி அவரை பாலியல் வனபுணர்வுக்கு உட்படுத்தினார். இது தொடர்பான வழக்கில் குற்றவாளிக்கு எதிராக குற்றம் நிரூபிக்கப்பட்டது.
இதையடுத்து குற்றவாளிக்கு 4 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அத்து டன், 10 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டது. இதை செலுத்தத் தவறினால் 3 மாத சாதாரண சிறைத் தண்டனை அனுபவிக்குமாறும் உத்தரவிடப்பட்டது.
அத்துடன், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நட்டஈடு வழங்குமாறும் செலுத்த தவறின் ஒரு வருட சாதாரண சிறைத் தண்டனையும் அனுபவிக்குமாறும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.