சாய்ந்தமருது மதரஸாவில் சிறுவன் மர்ம மரணம் தொடர்பில் மேலும் நான்கு பேர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டனர்.
சாய்ந்தமருது குர்ஆன் மத்ரஸாவில் இருந்து கடந்த செவ்வாய்க்கிழமை இரவு சிறுவன் ஒருவன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட் டார்.
சிறுவனின் மரணம் தொடர்பில் மதரஸாவின் நிர்வாகி கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை மதரஸாவில் பொலிஸார் சோதனை நடத்தினர்.
இதன்போது, அங்குள்ள சி. சி.ரீ. வி. கமெராவின் சேமிப்பகமான ஹார்ட்டிஸ்க் களவ டப்பட்டமை தெரிய வந்தது. இது தொடர்பில் விசாரணை நடத்திய பொலிஸார் சி. சி. ரீ. வி.கமெரா பொருத்துநர், அங்கு பணியாற்றும் ஊழியர்கள் உட்பட நால்வரை கைது செய்தனர். [எ]
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.