புதியவன்.
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் 15வது ஆண்டு நினைவு தினம் நேற்றுத் திங்கட்கிழமை(08) மட்டக்களப்பில் உள்ள ஊடகவியலாளர்களின் நினைவு தூபியில் கடைப்பிடிக்கப்பட்டது.
நினைவேந்தலை கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டு. ஊடக அமையம் என்பன இணைந்து நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும், சுடரேற்றி மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு அதனைத் தொடர்ந்து கடத்தப்பட்ட மற்றும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதிகோரி கவனவீர்ப்பு போராட்டம் ஒன்றும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் ஊடகவியலாளர்கள், மதத்தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.