(புதியவன்)
இந்தியாவில் மும்பையிலிருந்து பெங்களூருக்குப் பயணம் செய்த பயணி ஒருவர் (விமானம்)வானூர்த்தியின் கழிப்பறையில் மாட்டிக்கொண்டமை தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
செவ்வாய்க்கிழமை அதிகாலை வானூர்தி பெங்களூரில் தரையிறங்கிய பிறகு அவர் மீட்கப்பட்டார்.
ஸ்பைஸ்ஜெட் (SpiceJet) வானூர்தியில் அந்தச் சம்பவம் நடந்தது. அந்தக் கழிப்பறையின் கதவு திடீரெனப் பழுதானதால் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அவர் உள்ளே சிக்கிக்கொண்டார்.
வானூர்தி பெங்களூரில் தரையிறங்கிய பிறகே அவர் கழிப்பறையில் இருந்து வெளியே கொண்டுவரப்பட்டார். அவருக்கு உடனடியாகச் சிகிச்சை வழங்கப்பட்டது.நடந்த சம்பவத்துக்காக வானூர்தி நிறுவனம் பயணியிடம் மன்னிப்புக் கேட்டது.
"பயணம் முழுவதும், எங்கள் குழுவினர் பயணிக்கு உதவி மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கினர். வானூர்தி தரையிறங்கியவுடன், ஒரு பொறியாளர் கழிவறை கதவைத் திறந்தார், பயணி உடனடி மருத்துவ உதவியைப் பெற்றார்," என்று ஸ்பைஸ்ஜெட் செய்தித் தொடர்பாளர் பிபிசியிடம் கூறினார்.
வானூர்தி நிறுவனம் அவருக்கு முழு உதவியையும் வழங்கும் என்று கூறினார். பயணியின் கூடுதல் விவரங்களைப் பகிர்ந்து கொள்ள வானூர்தி நிறுவனம் மறுத்துவிட்டது, ஆனால் அந்த நபர் "அதிர்ச்சியில்" இருப்பதாக ஒரு செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.