உலகில் அதிகரித்து வரும் இஸ்லாம் :
உலகில் அதிகரித்து வரும் இஸ்லாம் :

(புதியவன்)


உலகில் அதிகரித்து வரும் இஸ்லாத்தை பின்பற்றும் மக்கள் தொகை: 2070 ஆம் ஆண்டு 70 சதவீதமாக அதிகரிக்கும்

உலகில் வேகமாக வளர்ந்து வரும் சமயமாக இஸ்லாம் இருப்பதுடன் எதிர்வரும் 2070 ஆம் ஆண்டுக்குள் இஸ்லாத்தை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை  உலகில் அதிகமாக இருக்கும் என பல தகவல்கள் தெரிவிக்கின்றன.

2015 ஆம் ஆண்டை விட எதிர்வரும் 2060 ஆம் ஆண்டளவில் உலக முஸ்லிம் மக்கள்தொகை 70 சதவீதமாக அதிகரிக்கும் என பியூ என்ற ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்திய பெருங்கடலில் இருக்கும் மாலைதீவில் 100 சதவீதம் முஸ்லிம்கள் உள்ளனர். அதேபோல், ஆப்பிரிக்க நாடான துனிசியாவின் மொத்த மக்கள் தொகையில் 99.8 சதவீதம் பேர் முஸ்லிம்கள்.

சோமாலியாவின் மக்கள் தொகையில் 99 சதவீதம் பேர் முஸ்லிம்கள். ஆப்கானிஸ்தான், ஈரான் போன்ற நாடுகளில் கூட 99 சதவீதம் பேர் இஸ்லாத்தை பின்பற்றுகின்றனர்.

முஸ்லிம்கள் அதிகம் வாழும் நாடுகளில் இந்தோனேசியா முதலிடத்தில் உள்ளதுடன் பாகிஸ்தான், இந்தியா மற்றும் பங்களாதேஷ் நாடுகள் அடுத்த இடங்களில் உள்ளன.

மாலைதீவுகள் பன்னிரண்டாம் நூற்றாண்டு வரை தமிழ் மற்றும் அன்றைய கால தென் இந்திய பகுதி அரசர்களால் ஆளப்பட்டது. பின்னர் மாலைதீவு பௌத்தத்தின் நாடாக மாறியது.

சோழ மன்னர்களும் மாலைதீவை ஆண்டனர். அதன் பின்னர் படிப்படியாக மாலைதீவு முஸ்லிம் நாடாக மாற ஆரம்பித்தது. மாலைதீவின் உத்தியோகபூர்வ மதம் இஸ்லாம். மாலைதீவில் முஸ்லிம் அல்லாதவர்கள் குடியுரிமை பெற முடியாது.

இந்தோனேசியாவிற்கு அடுத்தபடியாக பாகிஸ்தானில் அதிகளவான முஸ்லிம்கள் வாழ்கின்றனர்.
பாகிஸ்தானில் நடத்தப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி பாகிஸ்தானின் மொத்த மக்கள் தொகை 18,68,90,601, இதில் 18 கோடியே 25 லட்சத்து 92 ஆயிரம் பேர் முஸ்லிம்கள்.

பாகிஸ்தானில் இந்துக்களின் எண்ணிக்கை சுமார் 22,10,000 ஆகவும், சீக்கியர்கள் 74 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களாகவும் உள்ளனர். கிறிஸ்தவர்கள் சுமார் 18 லட்சத்து 73 ஆயிரம், அஹ்மதியர்கள் 1,88,340. சுமார் 4000 பார்சிகள் உள்ளனர்.

இந்த பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் 20 கோடிக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் வாழ்கின்றனர். கடந்த 2011 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 17.22 கோடி முஸ்லிம்கள் உள்ளனர். இது நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 14.2 சதவீதமாகும்.

முஸ்லிம் மக்கள் தொகை வேகமாக அதிகரித்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
பங்களாதேஷ் நான்காவது இடத்தில் உள்ளது. அந்த நாட்டில் 15 கோடிக்கும் மேற்பட்ட முஸ்லீம் மக்கள் வாழ்கின்றனர். ஆப்பிரிக்க நாடான நைஜீரியா ஐந்தாவது இடத்தில் உள்ளதுடன் அங்கு இஸ்லாத்தை பின்பற்றும் 11 கோடிக்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர். இதற்கு அடுத்ததாக எகிப்தில் 11 கோடி முஸ்லிம்கள் வாழ்கின்றனர். ஈராக், துருக்கி ஆகிய நாடுகள் அடுத்த இடங்களில் உள்ளன.

#todaysrilanka #todaytamilnews #todayjaffna #srilankanews

158 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.