(செல்வன்)
அனுமதி பத்திரமின்றி கனரகவூர்தி வாகனத்தில் மணல் ஏற்றிசென்ற குற்றத்திற்காக கனரகவூர்தி வாகனத்தையும், அதன் ஓட்டுநரையும் கைது செய்துள்ளதாக புதுக்குடியிருப்பு காவல்துறை தெரிவித்தனர்.
புதுக்குடியிருப்பு பகுதியில் நேற்று(10) சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்ட காவல்துறை வாகனத்தை வழிமறித்து சோதனை மேற்கொண்ட போதே அனுமதி பத்திரமின்றி கிரவல் மணல் ஏற்றி சென்றமை தெரியவந்துள்ளது.
இரண்டு வாகனத்தினதும் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், வாகனத்தினையும் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மேலதிக விசாரணைகளின் பின்னர்
கைது செய்யப்பட்ட நபர்களையும், வாகனத்தையும் நீதிமன்றத்தில் முற்படுத்தபடவுள்ளதாக காவல்துறை மேலும் தெரிவித்தனர்.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.