(புதியவன்)
இந்திய தலைநகர் புதுடெல்லியில் விவசாயிகளினால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டத்தின் மீது பாதுகாப்பு தரப்பினர் கண்ணீர் புகை தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தமது விவசாய உற்பத்திகளுக்கு உரிய விலை வழங்கக் கோறி விவசாயிகள் புதுடெல்லியை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்திவருகின்றனர். அந்தவகையில் இரண்டாம் நாளான இன்று (14)ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் புது டெல்லியை முற்றுகையிட்டு போராட்டத்தை மேற்கொண்ட நிலையில் அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
போராட்டம் காரணமாக புதுடெல்லியின் பிரதான போக்குவரத்து மார்க்கங்கள் தடைப்பட்டதுடன் பாரிய வாகன நெரிசலும் ஏற்பட்டிருந்தது.
இந்தநிலையில் விவசாயிகள் மீதான கண்ணீர் புகை தாக்குதல் காரணமாக போராட்டக்காரர்கள் நிலைகுலைந்து காணப்பட்டனர். இருந்த போதிலும் விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்தும் இடம்பெற்றுவருகின்றது.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.