ஆதவன்
நெதர்லாந்தின் முன்னாள் தலைமை அமைச்சரும் அவருடைய மனைவியும் கருணைக் கொலை செய்யப்பட்டுள்ளனர். மரணத்தின் போதும் இணை பிரியக்கூடாது என்ற அவர்களின் 70 ஆண்டுகால விருப்பம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பழைமைவாதம் வேரூன்றிய முதுபெரும் அரசியல்வாதியான நெதர்லாந்தின் முன்னாள் தலைமை அமைச்சர் ட்ரைஸ்வான் பல்வேறு தாராளவாத காரணங்களுக்காகப் பிரசாரம் செய்தவர். நெதர்லாந்தின் தலைமை அமைச்சராக மட்டுமல்லாது ஜப்பான் மற்றும் அமெரிக்காவுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவராகவும் பணியாற்றியுள்ளார்.
2019ஆம் ஆண்டு அவருடைய மூளையில் குருதிக் கசிவு ஏற்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டது. சிகிச்சை எதுவும் பயனளிக்காத நிலையில் அவர் தன்னைக் கருணைக்கொலை செய்துவிடுமாறு அரசிடம் விண்ணப்பித்தார்.
தனது கணவன் இல்லாத வாழ்க்கை தனக்கு சாத்திமற்றது என்றும் அந்த வாழ்க்கையை தான் வெறுப்பதாகவும், தனது வயதைக் கருத்திற்கொண்டு தன்னையும் கருணைக்கொலை செய்யுமாறு அவரின் மனைவியும் கருணைக்கொலைக்கு விண்ணப்பித்தார்.
இவர்கள் இருவருடைய கோரிக்கையையும் அதிலுள்ள தாற்பரியங்களையும் கவனத்திற்கொண்ட நெதர்லாந்து அரசாங்கம் அவர்கள் விருப்பப்படியே இருவரையும் ஒரேநேரத்தில் கருணைக்கொலை செய்துள்ளது. (எ )
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.