(செல்வன்)
2023ம் ஆண்டுக்கான வடமாகாண ரீதியில் நடாத்தப்பட்ட முகாமைத்துவ சேவை பதவியுர்வு பரீட்சை (Supra Exam) பெறுபேறுகள் அடிப்படையில் மாகாண ரீதியில் முல்லைத்தீவு மாவட்டத்தின் பணிமனைகளில் இருந்து தோற்றிய அதிகாரிகளில் முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினைச்சேர்ந்த ஜெயக்குமார் ராசஜோகினி ஆறாவது இடத்தைப் பெற்றிருந்தார்.
இந்த நிலையில் பதவி உயர்வு பெற்று கரைதுறைப்பற்று பிரதேச சபை செயலாளராக நியமிக்கப்பட்டு நேற்று (20) நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்டார்.
இந்நிலையில் இவர் இன்று (21) புதன் கிழமை கரைதுறைப்பற்று பிரதேச சபையில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.