(ஆதவன்)
ஈரானின் மிகச்சிறந்த தந்திரியும், அமெரிக்க எதிர்ப்பு மனோநிலையில் ஊறித்திளைத்தவரும், வெளிவிவகார அமைச்சருமான ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் மூன்று நாள்கள் பயணமாக இலங்கைக்கு வந்திருக்கின் றார். ஈரானிடமிருந்து இலங்கை பெற்றுக்கொண்ட 'உமா ஓயா' அபிவிருத்தித் திட்டம், எரிசக்தி ஒப்பந் தங்கள் குறித்து இந்தப் பயணத்தின்போது இருதரப்பும் கவனம் செலுத்தும் - விவாதிக்கும். நாணயங்களால் பிணைக்கப்பட்ட நிகழ்கால உலகில் ஒரு நாடு இன் னொரு நாட்டுடன் தன் தொடர்பை வலுப்படுத்துவது தவிர்க்கப்படமுடியாததுதான். ஆனால், கடந்த மூன்று வாரங்களாக நிகழும் அதியுச்சப் போர் நெருக்கடிக்கு மத்தியில் ஈரான் வெளிவிவகார அமைச்சரின் இலங் கைப் பயணம், இலங்கைக்கே தேவையற்ற இராஜ தந்திர நெருக்குவாரங்களை ஏற்படுத்தவல்லது. ஏனெ னில் இங்கு இலங்கை, அமெரிக்காவை நேரடியாகப் பகைக்கத் தலைப்பட்டுள்ளது.
கடந்த மூன்று வருடங்களாக அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான உறவில் பெருவிரிசல் ஏற்பட்டுள்ளது. அணுவாயுதங்களுக்குத் தேவையான யுரேனியத்தைச் சட்டவிரோதமாகச் செறிவூட்டுகின் றது என்று தெரிவித்த அமெரிக்கா ஏகப்பட்ட பொருளா தாரத் தடைகளை ஈரான் மீது திணித்து வைத்திருக் கின்றது. அதுமட்டுமல்லாமல், ஈரானிய இராணுவத் தலைவர்களை இலக்குவைத்துக் கொலை செய்யு மளவுக்கு இந்த விடயத்தில் அமெரிக்கா அதிதீவிரமாக இயங்கி வருகின்றது. ஈரானின் போர்த்தந்திரி என்று அறியப்படும் சுலைமானி அமெரிக்காவின் 'ட்ரோன்' தாக்குதலில் கொல்லப்பட்டமைகூட இதே பின்புலத் தில்தான். அண்மையில் ஜோர்தானில் உள்ள அமெ ரிக்கப்படைத்தளத்தின் மீதுநடத்தப்பட்ட தாக்குதலில் அமெரிக்கச் சிப்பாய்கள் மூவர் கொல்லப்பட்டதன் பின்புலத்திலும் ஈரானே உள்ளது என்று அமெரிக்கா ஆழமாக நம்புகின்றது. இதனால் எந்தநாடுகள் எல் லாம் ஈரானை ஆதரிக்கின்றனவோ - அணுகுகின்ற னவோ தூதரக உறவுகளை ஈரானுடன் வலுப்படுத்து கின்ற னவோ அவற்றை 'தீட்டு நாடுகளாக' கருதி தன் நட்பு வட்டாரத்துக்குள் இருந்து தொலைதூரத்தில் அமெரிக்கா தள்ளியே வைக்கும். உலக அரசியலில் அண்மைய நகர்வுகள் பலவும் அதையே கட்டியம் செய்கின்றன. இவ்வாறானதொரு பின்னணியில் ஈரா னிய வெளிவிவ கார அமைச்சர் இலங்கைக்கு வர விருக்கின்றமை சாதாரணமாகக் கடந்துபோகக்கூடிய நாளாந்தச் செய்தியல்ல. மிகப்பெரிய ஆபத்தை இந்தப் பயணம் இலங்கைக்கு உண்டுபண்ணக்கூடியது.
விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மௌனிக்கப் பட்ட பின்னர், இலங்கையில் பிராந்திய வல்லரசுகளான இந்தியா மற்றும் சீனாவின் கடல்சார் மற்றும் புவியியல் தலையீடுகள் நாளுக்குநாள் தீவிரமாகிக்கொண்டே வருகின்றன. இந்தியாவின் பக்கமாகச் சாய்வதா? சீனாவின் பக்கமாகச் சாய்வதா? என்ற தீர்மானத்தில் ‘மீனுக்குத் தலையும், பாம்புக்கு வாலுமாக' பரிதவிக் கின்றது இலங்கை. இவ்வாறிருக்கையில், ஈரான், அமெ ரிக்கா போன்ற நாடுகளும் இந்தத் தீவில் செல்வாக்குச் செலுத்த ஆரம்பித்தால் இலங்கையின் எதிர்காலம் மீண்டெழ முடியாத இருண்ட பக்கங்களால் சூழப் படவே செய்யும். அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் என்பது தூதரக - இராஜதந்திர விவகாரம் அல்ல. இது முழுக்கமுழுக்க ஆயுதங்களை மையப்படுத்தியது. ஈரானுடன் புதுப்பிக்கத்தக்க சாத்தி யங்கள் அல்லாமல் உறவை முறித்திருக்கின்றது அமெ ரிக்கா. சீனா - இந்தியா விவகாரம் போன்று ஈரான் - அமெரிக்கா விவகாரத்தை இலங்கை அணுக முடியாது அணுகவும் கூடாது. அமெரிக்கா என்னும் பிணம்தின் னிக்கழுகு இலங்கையை நோக்கிதன்கடைக்கண்ணைத் திருப்பினால் அதிலிருந்து மீண்டுவரும் திராணியும் பொருளாதாரப் பலமும் இலங்கையிடம் இப்போதைக் குக் கொஞ்சமும் இல்லை என்பது வெளிப்படை!
(20.02.2024-உதயன் பத்திரிகை)
#ஆசிரியர்_தலையங்கம் #வாசகர்கடிதம் #உதயன் #eelam #eelamnews #jaffnanews #uthayannews #recentnews #breaking
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.