(புதியவன்)
பிரான்சின் தலைநகர் பரிஸில் நடைபெறும் வருடாந்த விவசாய கண்காட்சியை விவசாயிகள் குழு ஒன்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது.
போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினர் கடும் நடவடிக்கைகள் மேற்கொண்டதாகவும் இரு தரப்பினருக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்றதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
விவசாயிகளை கண்காட்சிக்குள் நுழைய விடாமல் தடுக்க பிரான்ஸ் பாதுகாப்பு அதிகாரிகள் கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது.
விவசாயிகளின் வருமானக் குறைப்பு, பருவநிலை மாற்றம், விவசாயத் துறையில் முதலீடு அதிகரிப்பு உள்ளிட்ட விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு ஆதரவு அளிக்கக் கோரியும், பிரான்சின் அரச தலைவர் இம்மானுவேல் மேக்ரான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும் பிரான்சில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பாரிஸ் விவசாய கண்காட்சி பிரான்சில் ஒரு முக்கிய நிகழ்வாக கருதப்படுகின்ற நிலையில் 09 நாட்கள் நடைபெறவுள்ள இக்கண்காட்சியில் 06 இலட்சத்திற்கும் அதிகமானோர் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.