ஐ.நா. எனும் அவகாச வழங்கி!
ஐ.நா. எனும் அவகாச வழங்கி!

(ஆதவன்)

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 55 ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் இன்று ஆரம்பமா கின்றது. ஏப்ரல் மாதம் 5ஆம் திகதிவரை இடம்பெறவுள்ள இந்தக் கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான விவாதங்கள் மார்ச் மாதம் 4ஆம் திகதி முன்னெடுக்கப் படவிருக்கின்றது. இந்தக் கூட்டத்தொடரை எதிர் கொள்வதற்காக கொழும்பு, சிலவாரங்களாகவே பெரும் பிரயத்தனங்களை மேற்கொண்டிருந்த நிலையில், ஜனாதி பதி ரணில் மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான குழுவினர் சர்வதேச காய்நகர்த்தல் களையும் தற்போது ஆரம்பித்திருக்கின்றனர். இதனால், கொழும்பு எவ்வாறு காய்நகர்த்துமோ? சர்வதேசம் ஏதேனும் விட்டுக்கொடுப்புக்களைச் செய்துவிடுமோ? என்ற அச்சம் தமிழர் மனங்களில் தற்காலத்தில் மேலோங் கியிருப்பதும் கண்கூடு.

55 ஆவது கூட்டத்தொடரின் இலங்கை தொடர்பான விவாதத்தை மிகத்திடமாகவும் சர்வதேசப் பலத்துடனும் எதிர்கொள்வது எதிர் கொள்வது என்ற முடிவுக்கு இலங்கை வந்து கிட்டத் தட்ட இரண்டு ஆண்டுகள். 2022 ஆம் ஆண்டு இறுக்கமான நிபந்தனைகளுடன் இலங்கைக்கு அவகாசம் வழங்கப் பட்டபோது -சர்வதேசத்தில் தனக்கேற்ற மாற்று ஆதரவுத் தளமொன்றை ரணில் ஏற்படுத்த விளைந்தார். அணிசேரா நாடுகளையும் - ஆபிரிக்கக் கூட்டணிகளையும் -தன்னுடன் இணைத்துப் பயணிக்கும் முயற்சியில் அவர் தீவிரமாக இறங்கினார். மனித உரிமைகளைப் பேணு வதில் தற் தற்போது உலகிலுள்ள வெகுசில தலைவர்களில் ஒருவராகக் கருதப்படும் தென்னாபிரிக்காவின் ஜனாதி பதி சிறில் ரமபோசா தொடக்கம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இதுவரை இலங்கையை எதிர்த் துக் குரலெழுப்பாத தன்சானியா, பஹமாஸ், எத்தி யோப்பியா, பெனின் குடியரசு உள்ளிட்ட பல நாடுகளின் தலைவர்கள்வரை இலங்கை விவகாரத்தில் ரணில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ள தலைவர்களின் பட்டியல் மிக நீட்சியானது.

ஐக்கிய ஐக்கிய நாடுகள் ந மனித உரிமைகள் பேரவையில், இலங்கைக்கு எதிராக இதுவரை முன்வைக்கப்பட்டுள்ள போர்க்குற்றம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளைத் துடைத் தெறிவதற்கு இலங்கை எத்தனையோ முயற்சிகளை மேற் கொண்டபோதிலும் அத்தனையும் தோல்வியேகண்டன். இதுவரை இலங்கையை பொறுப்புக்கூறச் செய்வதற்கு சர்வதேசத்தால் முடியாவிட்டாலும், மறுமுனையில் தீர் மானங்கள் நீர்த்துப்போகச் செய்யப்படாமல்உயிர்ப்புடன் இருக்கும் பின்னணியில் இதை இலங்கையின் தோல்வி அல்லது பின்னடைவு என்றும்கூடக் கொள்ளலாம். ஆதலால், இந்த வருடத்தில் மனித உரிமைகள் பேர வையின் கூட்டத் தொடர்கள் இரு தரப்புக்கும் மிகமிக முக்கியமானவை. இவ்வாறானதொரு பின்னணியில்தான் உகண்டாவில் வைத்து அணிசேரா நாடுகளின் தலைவர் களுடன் - ஆபிரிக்கத் தலைவர்களுடன் -ரணில் மேற் கொண்ட பேச்சுகள், அவர்களை 'தன் அணியாக்க'ரணில் கைக்கொள்ளும் வியூகமா? என்றும் கருதப்பட்டது. இவையெல்லாம் இணைந்து இவ்வருடக் கூட்டத் தொடரில் வலுவாகவே எதிரொலிக்கும் என்று நம்பப் படுகின்றது.

தாமதித்த நீதி- மறுக்கப்பட்ட நீதி என்பார்கள். நீதி எவ்வளவுக்கெவ்வளவு தாமதமாகின்றதோ அது அவ்வ ளவுக்கவ்வளவு குற்றவாளி தப்பித்துச் செல்வதற்கான வாய்ப்புகளையும் உருவாக்கவே செய்கின்றது. இலங் கையில் போர் முடிவுக்கு வந்து 15 வருடங்கள் நெருங்கு கின்ற நிலையில், போரில் கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கிட்டுவதற்கான பொறிமுறைகளின் பூர்வாங்க நடவ டிக்கைகள்கூட இன்னும் ஆத்மார்த்தமாக ஆரம்பிக்கப்ப டாமல் இருப்பதுஐ.நா.வின் அப்பட்டத் தோல்வி ஐக்கிய நாடுகள்சபை தன் நிலைப்பாட்டில் உறுதியாக நின்றி ருந்தால், அழுத்தத்தை உரிய வகையில் கொடுத்திருந்தால் இன்று தப்பித்தோடும் வாய்ப்பை கொழும்பு தேடிக்கொண்டிருக்கச் சந்தர்ப்பமில்லை. தர்ப்பமில்லை. இந்த வருடத்தி லாவது தமிழர்களின் நீதிக்கான நெடும் பயணத்தில் ஓர் ஆற்றுப்படுத்தலை ஐ.நா. வழங்குமா? என்பதே ஈழத் தமிழர் களின் மனங்களில் தற்போதுள்ள எதிர்பார்ப்பு....!

(26.02.2024-உதயன் பத்திரிகை)

#ஆசிரியர்_தலையங்கம் #வாசகர்கடிதம் #உதயன் #eelamnews #jaffnanews #uthayannews #recentnews #breaking

355 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.