(செல்வன்)
முல்லைத்தீவு - அளம்பில் பகுதியில் இரண்டு உந்துருளி எதிர் எதிரே மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (01.03.2024) இரவு 7 மணியளவில் இடம்பெற்ற இவ் விபத்து சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
குமுழமுனை பகுதியிலிருந்து அளம்பில் நோக்கி பயணித்த உந்துருளியும் செம்மலையிலிருந்து தண்ணி முறிப்பு வயல் நோக்கி பயணித்த உந்துருளியும் அளம்பில் சந்திக்கு அருகே சென்று கொண்டிருந்த போது எதிர் எதிரே மோதி விபத்துக்குள்ளானது.
இவ் விபத்தில் இரு உந்துருளியில் பயணித்த மூவரும் காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மருத்துவமனை விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்திருந்தனர்.
மேலதிக சிகிச்சைக்காக யாழ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த செம்மலையை சேர்ந்த சிங்கராசா யோகராசா (வயது 54) என்பவர் இன்று (02) அதிகாலை உயிரிழந்துள்ளார்.
குமுழமுனை பகுதியிலிருந்து வந்து விபத்தினை ஏற்படுத்தியதாக கூறப்படுபவர்கள்
மதுபோதையில் இருந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ள நிலையில் விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.