செல்வன்.
புதுக்குடியிருப்பு கமநல சேவை பணிமனையின் கீழ் புதுக்குடியிருப்பு கிழக்கில் பேராற்றின் கழிவு நீரினை பயன்படுத்தி சிறுபோக நெற்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கான தீர்மானங்கள் எடுக்கும் கூட்டம் இன்று புதன்கிழமை(06) புதுக்குடியிருப்பு கமநலசேவை பணிமனையில் புதுக்குடியிருப்பு கிழக்கு கமக்கார அமைப்பின் தலைவர் அன்புமணி தலைமையில் நடைபெற்றுள்ளது.
இதன்போது புதுக்குடியிருப்பு கமநல சேவை பணிமனை அபிவிருத்தி உத்தியோகத்தர் சுஜீவராகவன் மற்றும் முள்ளியவளை கமநல சேவைபணிமனை உத்தியோகத்தர் மற்றும் விவசாயிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது முத்தையன் கட்டுகுளத்தின் கழிவு நீரினை பேராற்றில் மறித்து தடுப்பு அணைகளை பயன்படுத்தி சிறுபோக நெற்செய்கையில் 417 விவசாயிகளின் 1057 ஏக்கர் வயல் செய்கை பண்ண தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சிறுபோக செய்கைக்கான விதைப்பானது எதிர்வரும் ஏப்ரல் 1ஆம் திகதி தொடக்கம் 15ஆம் வரையான காலமும் மூன்றரை மாத நெல்லினை பயன்படுத்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.