கல்முனை அல் - மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தின் விஞ்ஞான ஆய்வுகூட திறப்பு விழா மற்றும் கண்காட்சி நிகழ்வு நேற்றுமுன்தினம் புதன்கிழமை(06) அதிபர் எம்.ஐ.அப்துல் றசாக் தலைமையில் பாடசாலையில் இடம்பெற்றது.
மாணவர்களின் ஆக்கங்களைக் கொண்டு ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன் இவ்விஞ்ஞான ஆய்வுகூடம் ஒழுங்கமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டதுடன் தொடர்ச்சியாக இரு நாட்கள் கண்காட்சி நிகழ்வுகளும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த மருத்துவமனையின் மகப்பேற்று மருத்துவ நிபுணர் டாக்டர் எச்.எம்.றஸீன் முஹம்மட் கலந்து சிறப்பித்தார்.
இங்கு மாணவர்களால் பரிசோதனைகள் செய்யப்பட்டு விளக்கங்களும் வழங்கப்பட்டது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.