செல்வன்.
முல்லைத்தீவு மாவட்ட கல்வி வலயத்துக்குட்ப்பட்ட உடையார்கட்டு மகாவித்தியாலய மாணவர்களின் 2024ஆம் ஆண்டு இல்ல மெய்வல்லுனர் போட்டியினை முன்னிட்டு மாணவர்களுக்கிடையிலான மரதன் ஓட்டப்போட்டி நேற்று வியாழக்கிழமை(07) சிறப்பாக இடம்பெற்றது.
ஆண்களுக்கான மரதன் ஓட்டப்போட்டி புதுக்குடியிருப்பு சந்தியிலிருந்து உடையார்கட்டு மகாவித்தியாலயம் வரையும் பெண்களுக்கான மரன் ஓட்டப்போட்டி கைவேலி கணேசாவித்தியாலயத்திற்கு முன்பாக ஆரம்பித்து உடையார்கட்டு மகாவித்தியாலயம் வரை இடம்பெற்றது .
இந்த மரதன் ஓட்டப்போட்டியில் பாடசாலையின் மாணவ மாணவிகள் 60பேர் கலந்து கொண்டனர்
குறித்த மரதன் ஓட்டப் போட்டியில் ஆண்கள் பிரிவில் முதலாம் இடத்தை ந.பவிராஜும் இரண்டாம் இடத்தை ஜெ.தியாகசீலனும் மூன்றாம் இடத்தை வி.அபிசனும் பெற்றுக்கொண்டதோடு பெண்கள் பிரிவில் முதலாம் இடத்தை .ச.அபிசாவும் இரண்டாம் இடத்தை மோ.துர்க்காவும் மூன்றாம் இடத்தை இ. பன்சிகாவும் பெற்றுக்கொண்டனர்
ஆண்கள் பிரிவிலும் பெண்கள் பிரிவிலும் வெற்றிபெற்ற முதல் மூன்று இடங்களையும் பெற்ற வீரர்களுக்கு பதங்கங்களும் கேடயங்களும் சான்றிதழும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டுள்ளதுடன் முதல் பத்து இடங்களை பெற்ற வீரர்களுக்கு பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கி மதுப்பளிக்கப்பட்டது.
மேலும் இந்த மரதன் ஓட்டப்போட்டிக்கான முழுமையான நிதி அனுசரணையினை கனாடவில் வசிக்கும் கந்தசாமி பத்மநாதன் வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.