ஆதவன்.
பிரான்ஸின் தென்கிழக்குப் பகுதியில் நேற்றுமுன்தினம் வீசிய கடும் புயல் காரணமாக ஐந்து பேரைக் காணவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸின் தென்கிழக்கு நகரமான கார்ட் நகரம் கடந்த சனிக்கிழமை வீசிய புயலால் கடும் பாதிப்புகளை எதிர்கொண்டது. புயலின் விளைவால் பெரும் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டிருந்தது. இதன்போது பாலமொன்றின் ஊடாகப் பயணித்த கார் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. அந்தக் காரிலிருந்த இரண்டு குழந்தைகள் உள்ளிட்ட ஐந்து பேர் காணாமற் போனநிலையில் அவர்களைத் தேடும் பணி கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மீட்புக் குழுவினர் உலங்குவானூர்திகள் மூலம் காணாமற்போனவர்களைத் தேடிவருகின்றனர். கணிக்க முடியாத திடீர் வெள்ளப்பெருக்கே அசம்பாவிதத்துக்குக் காரணமானது என்று தெரிவிக்கப்பட் டுள்ளது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.