(ஆதவன்)
பறந்துகொண்டிருந்த பயணிகள் விமானத்தின் விமானி அறையில் இரு விமானிகளும் உறங்கிக் கொண்டிருந்த சம்பவம் தொடர்பில் இந்தோனேஷிய அர சாங்கம் விசாரணையை ஆரம் பித்துள்ளது. சுலேவெசி நகரிலிருந்து ஜகர்த்தா நகரை நோக்கி 153 பேருடன் பறந்துகொண்டிருந்த விமானமொன்றில் இரு விமானிகளும் 28 நிமிடங்கள் உறங்கினர் என இந்தோனேஷிய போக்குவரத்து பாதுகாப்புக் குழு தெரிவித்துள்ளது. விமானம் புறப்பட்ட சிறிதுநேரத்தில் துணை விமானியிடம்பொறுப்பை ஒப்படைத்துவிட்டு, தான் உறங்கப்போவதாக தலைமை விமானி கூறியிருக்கிறார். எனினும், துணை விமானியும் சிறிதுநேரத்தில் உறங்க ஆரம்பித்தார்.
உறக்கத்திலிருந்து விழித்த விமானி, துணை விமானியும் உறங்கிவிட்டதையும் விமானம் சிறிதுதூரம் பாதைமாறி சென்றிருப்பதையும் உணர்ந்தார். விமானியை ஜகார்த்தா வான் கட்டுப் பாட்டாளர்கள் தொடர்புகொள்ள முயன்றபோதிலும், 28 நிமிட மௌனத்தின் பின்னரே தொடர்பு கிடைத்தது. பின்னர் அவர் கட்டுப் பாட்டாளர்களுடன் தொடர்பு கொண்டு, விமானத்தை தரையிறக்கினார் என செய்தி வெளியா கியுள்ளது. விமானம் புறப்படு வதற்குமுன்னர் விமானியிடமும் துணை விமானியிடமும் நடத்தப்பட்ட இரத்த அழுத்த சோத னைகள், இதயத்துடிப்பு வேகம் ஆகியன சாதாரண அளவிலேயே இருந்தன என விமானப் போக்குவரத்து நிபுணர் அல்வின் லீ கூறியுள்ளார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.