பிரேத பரிசோதனை தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!
புதியவன்.
அம்பாறை பெரியநீலாவணை பகுதியில் தந்தையால் வெட்டி கொலை செய்யப்பட்ட இரண்டு பிள்ளைகளின் பிரேத பரிசோதனை இன்று வெள்ளிக்கிழமை(15) முன்னெடுக்கப்படவுள்ளது.
குறித்த பிரேத பரிசோதனை அம்பாறை ஆதார மருத்துவமனையில் மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் 29 வயதுடைய ஆண் ஒருவரும் 15வயதுடைய சிறுமி ஆகிய இரண்டு பிள்ளைகளையும் கொலை செய்த 63வயதான தந்தை தமது உயிரையும் மாய்த்துக் கொள்ள முயற்சித்த சம்பவம் நேற்று(14) அம்பாறை - பெரியநீலாவணை - பாக்கியதுல் சாலியாவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த இருவரும் சிறப்புத் தேவையுடையோர் என தெரியவந்துள்ளது. குறித்த தந்தை கல்முனை ஆதார மருத்துவமனையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவத்துக்கான காரணம் இதுவரையில் தெரியவராத நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பெரியநீலாவணை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.