மாதவன்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு திம்பிலி ஆரம்ப பாடசாலைக்கு சந்நிதியான் ஆச்சிரமத்தால் 2லட்சத்து 90ஆயிரம் ரூபா பெறுமதியான குடிநீர் சுத்திகரிப்பு பொறித் தொகுதி வழங்கப்பட்டு இன்று புதன்கிழமை(20) காலை திறந்து வைக்கப்பட்டது.
பாடசாலை அதிபர் செந்தில் ராஜ் தலமையில் இடம் பெற்ற நிகழ்வை நன்னீர் சுத்திகரிப்பு பொறியினை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகன் சுவாமிகள் திறந்து வைத்துள்ளார்.
இந்நிகழ்வில் பருத்தித்துறை ஆதார மருத்துவமனை மருத்துவர் கலாநிதி செந்தில் குமரன், சந்நிதியான் சைவ கலை பண்பாடு பேரவை உறுப்பினர்களான சிவநாதன், தயாபரன், செ. ஞானசபேசன், சிறிகாந்தன், கு.தெய்வேந்திரம், மற்றும் தொண்டர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர். (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.