தீயிட்டு எரிக்கப்பட்ட இரு வாகனங்கள்!
மாதவன்.
நாவாந்துறையில் இன்று(15) அதிகாலை இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இரண்டு வாகனங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன.
சிறிய ரக வாகனம் ஒன்று மற்றும் முச்சக்கர வண்டி ஒன்று ஆகியன இவ்வாறு தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன. புத்தாண்டு தினத்தில் இடம்பெற்ற முறுகல் காரணமாகவே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிய வருகிறது.
இது குறித்து யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதையடுத்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.