(புதியவன்)
தரம் குறைந்த மருந்துகளை நோயாளர்களுக்கு வழங்கிய சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் குற்றப் புலனாய்வுப் பணிமனை, முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மீது கொலை குற்றச்சாட்டு வழக்குத் தொடரவுள்ளதாக தெரியவந்துள்ளது.
கெஹெலிய உள்ளிட்ட சில சுகாதார அமைச்சின் அதிகாரிகள் பல குற்றங்களை புரிந்துள்ளதாகவும், இவை தொடர்பில் அவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்தும்
முறை தொடர்பில் ஆராய்ந்து வருவதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தரமற்ற மருந்துகளை நோயாளர்களுக்கு வழங்கியதன் மூலம் அதிகளவிலான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாகவும் சுமார் 100 பேர் நிரந்தர அங்கவீனர்களாகப் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இந்தக் குற்றங்கள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதான முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட சுகாதார அமைச்சின் எட்டு அதிகாரிகளுக்கும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
தரமற்ற மருந்துகளைப் பெற்றுக்கொண்டதால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் நிரந்தர நோய்களுக்கு ஆளாகியுள்ள நபர்கள் தொடர்பில் விரிவான விசாரணைகளை நடத்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
அதற்காக சுகாதார அமைச்சின் முழுமையான ஒத்துழைப்பைப் பெற குற்றப் புலனாய்வுப் பிரிவு திட்டமிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.