உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளில் மர நடுகை திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இயற்கையின் சுவாசத்தை வளர்ப்பதற்கான ஒரு பெருநிறுவன சமூகப் பொறுப்பு என்னும் தொனிப்பொருளில் 10 ஆயிரம் மரங்களை நடுதல் என்னும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் அமைந்துள்ள 18 ஆவது விஜயபாகு காலாட் படைப்பிரிவில் மரநடுகையின் ஆரம்ப கட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன் போது கல்முனை இராணுவ முகாமின் இரண்டாவது நிர்வாக கட்டளை அதிகாரி மேஜர் தயானந்த மற்றும் சியபத நிதி நிறுவனத்தின் கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான பிராந்திய முகாமையாளர் முஹம்மட் பிரிம்சாத் அந்நிறுவனத்தின் கல்முனை கிளை முகாமையாளர் முஹம்மட் பாயிஸ் அதன் ஊழியர்களான ஏ.ஜவாத் ,எம்.ரி.எம்.முஜீப், ஏ.ஆதீஸ் ,வி.திசிதரன், எஸ்.அஜய், என்.பவாகரன், ஏ.ஏ.ஏ றிஹான், ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதேவேளை சாய்ந்தமருது கோட்டக்கல்வி அதிகாரி என்.எம்.எம் மலீக் தலைமையில் சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலயத்திலும் மர நடுகை திட்டமானது முன்னெடுக்கப்பட்டது. இதன் போது சாய்ந்தமருது கல்வி கோட்டத்தை சேர்ந்த 09 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு பெறுமதி வாய்ந்த மரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன. குறித்த மர நடுகைத் திட்டத்தில் தென்னை ,மாமரம், தோடை, மாதுளை ,ஜம்பு ,முந்திரிகை, உள்ளிட்ட மரங்கள் நாட்டப்பட்டன. எதிர்காலத்தில் சூழலை பசுமையாக்கும் திட்டத்தின் கீழ் பொது இடங்கள் கடற்கரைப் பிரதேசங்கள் அரச நிறுவனங்கள் தனியார் நிறுவனங்கள் மத ஸ்தாபனங்கள், வயல் காணிகள் உள்ளிட்ட சகல இடங்களிலும் பொதுமக்களின் பங்களிப்புடன் இத்திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.