பதுளை மாவட்டத்தின் பகுதிகளில் கடுமையான வறட்சி மற்றும் காற்றுடன் கூடிய வானிலை காரணமாக பல காட்டுத்தீ சம்பவங்கள் பதிவாகி வருகின்றன. இனந்தெரியாத தரப்பினராலும் காட்டுத்தீ வைக்கப்பட்டுள்ளதாகவும் காட்டுத்தீ தொடர்பான தகவல்களை 117 என்ற இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி அறிவிக்க முடியும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை, மஹியங்கனை தம்பான மாவரகல வனப்பகுதியில் தொடர்ந்து காட்டுத்தீ பரவுகிறது என்றும் இதுவரையில் 70 ஏக்கருக்கும் அதிகமான வனப்பகுதி தீக்கிரையாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.