ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் உத்தரவின் பேரில் இன்று புதன்கிழமை மட்டக்களப்பு கெம்பஸில் தங்கியிருந்த இராணுவம் அதனை முன்னாள் ஆளுநர் மற்றும் மட்டக்களப்பு கம்பஸ் ஸ்தாபகருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புழ்ழாஹ்விடம் கையளித்துவிட்டு வெளியேறினர்.
கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அடுத்து குறித்த மட்டக்களப்பு கெம்பஸ் இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.
மட்டக்களப்பு பல்கலைக்கழகம் அதனை தொடர்ந்து நாட்டில் ஏற்பட்ட கொரோனா தொற்று சிகிச்சை நிலையமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வந்ததுள்ளமை குறிப்பிடத்தக்கது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.