நேற்று முன்தினம் திங்கட்கிழமை இலங்கை கடற்படையினர் கற்களை கொண்டு தாக்கியதில் இராமேஸ்வர கடற்றொழிலாளர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளதாக இராமேஸ்வரப் பொலிஸார் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இராமேஸ்வரம் துறைமுகத்தில் கடற்றொழிலுக்கு அனுமதி சீட்டு பெற்ற கடற்றொழிலாளர்கள் 50 க்கு மேற்பட்ட விசைப்படகுகளில் கச்சதீவு அருகே கடற்றொழிலில் ஈடுபட்டு கொண்டிருந்த போது உளவு பணிக்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்டதாக கூறி இராமேஸ்வரத்தை சேர்ந்த ஒரு விசைப்படகு மீது கற்கள் கொண்டு தாக்கியுள்ளதாக இந்தியப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன் போது கடற்றொழிலாளர் ஒருவர் படுகாயமடைந்தநிலையில் இராமேஸ்வரம் அரசு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் படுகாயம் அடைந்த கடற்றொழிலாளரிடம் இந்திய மத்திய, மாநில உளவு பொலிஸார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.