இந்தியாவில் அகதியாக இருக்கும் எம்நாட்டு மக்களுக்கு இதுவரை இந்தியா குடியுரிமை வழங்கவில்லை என மட்டக்களப்பு மாநகரசபையின் முன்னாள் முதல்வர் சரவணபவன் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் நடைபெற்ற காந்தி ஜெயந்தி விசேட நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கையிலிருந்து உலகமெங்கும் இடம்பெயர்ந்த தமிழர்களுக்கு அந்ததந்த நாடுகள் குடியுரிமைகள் வழங்கிவரும் நிலையில் எமது தொப்புள்கொடி உறவாகவுள்ள இந்திய அரசாங்கம் அங்கு அகதியாகவுள்ள எமது மக்களுக்கு குடியுரிமையினை இதுவரை வழங்கவில்லை.
தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலினால் முன்வைக்கப்பட்டுள்ள அகதிகளுக்கான திட்டம் பரிசீலனை செய்யப்பட்டு அகதிகளாகவுள்ள தமிழர்களுக்கு குடியுரிமையினை வழங்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.