Tiktok காணொளி பதிவு செய்வதற்காக 6 பேர் கொண்ட குழு தோணி மூலம்பயணம் செய்த வேளை வாவியில் தோணி கவிழ்ந்த நிலையில் இருவர் சடலமாக மீட்கப்பட்டதுடன் 4 பேர் நீந்தி உயிர்தப்பியதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மட்டு சீலாமுனையைச் சேர்ந்த 19 வயதுடைய தவசீலன் கிருசாந்தன், மாமாங்கத்தைச் சேர்ந்த 18 வயதுடைய பிரபாகரன் பிருந்தயன் ஆகிய இருவருமே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
சம்பவதினத்தன்று காலை 11 மணியளவில் தோணியில் பயணித்து வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்துவிட்டு மீண்டும் பயணித்த போது தோணியில் கட்டப்பட்டிருந்த குள்ளாதடி இரண்டாக உடைந்ததையடுத்து தோணி வாவியில் கவிழ்ந்து அனைவரும் நீரில் மூழ்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் இருவர் காணாமல் போயிருந்ததையடுத்து மீனவர்களின் உதவியுடன் அவர்களை தேடப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நாவலடிபகுதியில் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்கள் சடலங்களாக மீட்கப்பட்டு மட்டு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மற்றும் காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.