மகாராஷ்டிராவின் அகமத் நகரில் இருந்து அஸ்தி நகருக்கு சென்ற புறநகர் பயணிகள் ரயில் திடீரென தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று பிற்பகல் 3 மணியளவில் நாராயண்தோஹ் மற்றும் அஹமத்நகர் பிரிவுக்கு இடையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
5 பெட்டிகள் மொத்தமாக அடுத்தடுத்த பெட்டிகளுக்கு பரவிய தீயால் எரிந்து நாசமானது. பின்னர், மாலை 4.10 மணியளவில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர்.
பயணிகள் அனைவரும் பத்திரமாக தீ பரவுவதற்கு முன்னர் வெளியேற்றப்பட்டனர் என்றும், யாருக்கும் காயங்கள் ஏற்பட்டதா அல்லது உயிரிழப்புகள் குறித்த எந்த தகவலும் இன்னும் வெளியாக வில்லை. தற்போது, ரயில்வே போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.