[புதியவன்]
ஐதராபாத் குடிமல்காபூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு படையினர் 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தெலங்கானா மாநிலம் ஐதராபாத் குடிமல்காபூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 6வது மாடியில் உள்ள ஸ்டோர்ரூமில் ஏற்பட்ட தீ, மருத்துவமனை முழுவதும் பரவியது. இதனால் பீதியடைந்த மருத்துவமனை ஊழியர்கள், நோயாளிகளை உடனடியாக பாதுகாப்பாக வெளியேற்றினர். மேலும் மருத்துவமனை அமைந்துள்ள 6 மாடி கட்டிடம் முழுவதும் தீ பரவியதால் அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர்.
தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் மற்றும் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து 4 வாகனங்களில் இருந்த தண்ணீரை பயன்படுத்தி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். கட்டடத்தின் 6வது மாடியில், மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்கள் தங்கும் விடுதி உள்ளது. அங்கு சுமார் 100 செவிலியர்கள் தங்கியிருந்தனர்.
பலர் அலறியடித்தபடி அங்கும் இங்கும் ஓடினர். பின்னர் சுமார் 4 மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். மேலும் அங்கிருந்த நோயாளிகளும் எவ்வித ஆபத்தும் இன்றி வேறு அறைகளுக்கு மாற்றப்பட்டனர். இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதமானதாக தெரிகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. [எ]
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.