(புதியவன்)
கல்முனை வடக்கின் அனைத்து சிவில் அமைப்புக்களும் இணைந்து "ரௌத்திரம் பழகு, அநீதியை தட்டிக் கேள்" என்ற தொனிப்பொருளின் கீழ் கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் நிர்வாக செயற்பாடுகள் மீது பிரயோகிக்கப்படும் அடக்கு முறைகளுக்கு எதிராக இன்று இரண்டாவது நாளாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றது.
கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் உள்ள அதிகாரங்கள், நிலங்கள், கிராம சேவையாளர் பிரிவுகள் என பல விடயங்களில் அநீதி இழைக்கப்படுவதாகவும், இவ்வாறான பல விடயங்களில் தலையீடுகள் செய்து பொது மக்கள் தமக்கான உரிய அரச சேவையை பெற்றுக்கொள்வதில் இடையூறுகள் விளைவிக்கப்படுவதாகவும் வலியுறுத்தி இது சார்ந்த அரசியல் சக்திகளுக்கு எதிராக குரல் கொடுத்து இன்று இரண்டாவது நாளாகவும் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் போராட்டத்துக்கு வலு சேர்க்க இணையுமாறு இளைஞர்கள் யுவதிகள் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.