(மாதவன்)
ஐந்து நாடுகள் பங்குபற்றும் உலக சிலம்பம், சிவலீமன் சிலம்ப சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று சனிக்கிழமை யாழ் துரையப்பா விளையாட்டு அரங்கில் காலை 8 மணிக்கு ஆரம்பமாகியது.
இலங்கை சிவலீமன் சங்கத்தின் தலைவரும் உலக சிவலீமன் சங்கத்தின் இலங்கைத் தலைவருமான யசோதரன் தலைமையில் இந்த நிகழ்வு ஆரம்பமானது.
இலங்கை, இந்தியா, லண்டன், மலேஷியா, துபாய், சிங்கப்பூர் ஆகிய நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் இதில் கலந்துகொண்டு விளையாடி வருகின்றனர்.
இந்த நிகழ்வின் பரிசளிப்பு நிகழ்வில் இளைஞர் மற்றும் விளையாட்டு இராஜாங்க அமைச்சர் அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.