(ஆதவன்)
கடுமையான வறட்சி காரணமாக யாழ். குடாநாட்டில் உள்ள நீர்நிலைகளில் நீர்மட்டம் வெகுவாகக் குறைவடைந்து செல்கின்றது என்று தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் விவசாயிகள் தெரிவித்ததாவது: யாழ்ப்பாணக் குடாநாட்டில் தற்போது நிலவும் கடும் வறட்சி காரணமாக, மாவட்டம் விரைவான நீர் இழப்பை எதிர்கொண்டு வருகின்றது.
இதனால் விவசாய நடவடிக்கைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. தண்ணீரின்றி கால்நடைகளும் அலைந்து திரிகின்றன. இதே நிலை தொடர்ந்தால் தண்ணீர் இழப்பு அதிகரித்து விவசாயத்தைத் தொடரமுடியாத நிலை ஏற்படும் - என்றனர். (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.