'பஞ்சி பிடிச்ச கழுதை படுத்துறங்கப் பஞ்சணை கேட்டிச்சாம்" எண்டு படியை ஆக்கள் சொல்லுவினம். இப்ப என்னெண்டால் அப்பிடி பஞ்சி பிடிச்சு, வேலைவெட்டி செய்யாமல் ஏய்க்கிறவை தங்களை ஆரும் மேய்க்க வெளிக்கிட்டால் உடன "மனக்கு சுயர் பேசினதால மன உளைச்சல், அதால தற்கொலை செய்யப்போறன் எண்ட கணக்கில மேலிடங்களுக்கு மொட்டைக் கடிதம் எழுகிற காலமாப் போட்டது.
சிட்டடியில ஒரு அரசாங்க உத்தியோகத்தர், தன்னைத் தற்கொலை செய்யிற அளவுக்கு மனவுளைச்சலை உண்டாக்கிறார் எண்டொரு கடிதத்தை இணையங்களில் வெளியிட்டவர். அப்பிடி ஒரு உத்தியோகத்தரை தற்கொலை செய்யத் தூண்டுற அளவுக்கு அப்பிடி என்ன ஆய்க்கினை குடுத்திருப்பினம் எண்டு பட்சி உள்ளுக்க நுழைஞ்சு துழாவிப் பாக்கத்தான் உண்மை என்னெண்டு வெளியில வந்தது.
வலி.மேற்குப் பிரதேசசபையில் வேலை செய்யிறதாச் சொல்லிக்கொள்ளுற அந்த அரசாங்க உத்தியோகத்தர் குறும்படங்களில நடிக்கிற ஒருத்தர். அதால ஆள் விடிய வேலைக்கு வந்திட்டு, கொஞ்ச நேரத்தில் எஸ்கேப் ஆகிடுவார். பிறகு அடுத்தநாள் தான் ஏப்பி எஸுக்கு வந்து முதல்நாள் பின்னேரம் வைக்க வேண்டிய சைனை வைப்பார். பிங்கர் பிரிண்ட் மிஷின் இருந்தும் அதில் காலைமை மட்டும் கையைக் குடுப்பாராம். பின்னேரம் கையைக் குடுத்தா பசுலே எஸ்கேப் ஆனது தெரிஞ்சிடும் எண்டதால, பின்னேரம் அவர் பிங்கர் வைக்கிறேலையாம். சந்தையில விவசாயியளிட்ட பத்து வீதம் கழிச்சுக் கொண்டு சாமானை வாங்கிற அநியாயத்தைத் தடுக்கிற குழுவில் இவரையும் போட்டது. ஆனால் ஆள் இருநாளும் சந்தைப்பக்கம் எட்டியும் பாக்கேலை. இதால ஆளை சங்கானை சப்டுப்பீபில் இருந்து சுழிபுரம் சப்ஒப்பீஸுக்கு மாத்தியிருக்கினம் அங்க போயும் அவர் பெரும் அலப்பறை.
முதல் அலப்பறை மேசையில தொடங்கியிருக்கு. தனக்கு மற்றவையை விட பெரிய மேசையும். சுழல் கதிரையும் வேனும் எண்டு அடம்பிடிச்சிருக்கிறார்.ஆனால் எல்லாரையும் மாதிரியே அவருக்கும் மேசை, கதிரை குடுக்கச் சொல்ல ஆளுக்கு கடுப்பு. அந்தக் கடுப்பிலயோ. பஞ்சிக்குணத்திலயோ ஆள்கடையளில் போய் வரி அறவிற்ற வேலையைச் செய்யாமல் ஒப்பீஸையே கட்டிப்பிடிச்சுக்கொண்டு இருந்திருக்கிறார். அதால கனக்க வேலையள் நிலுவையில வந்திருக்கு. அதை ஒவ்வொரு திங்கட்கிழமையும் நடக்கிற ஒப்பீஸ் கூட்டத்தில் "ஏன் வேலை செய்யேலை? ஏன் பெண்டிங்பைல் கூடுது?" எண்டு கேட்டிருக்கினம். அதைவிட கூட்டத்துக்கும் பிந்திப் போயிருக்கிறார், அதுக்கும் "சுபட்டமெண்டா பிந்தக் கூடாது, 9 மணிக்கு நிக்கோணும்" எண்டு மேலதிகாரி சொல்லியிருக்கிறார். "ஏன் வேலை செய்யேலை? ஏன் பிந்தினது?" எண்ட இந்த ரண்டு கேள்வியும் தான் அந்த வெட்டி ஒப்பீஸருக்கு தற்கொலை செய்யிற அளவுக்கு மன உளைச்சலைக் கொண்டந்திருக்காம். மாடுமாதிரி வேலை செய்யிறவை இப்பிடி வேலை செய்தும் பேச்சு விழுகுதே எண்டு கவலைப்பட்டால் ஒரு நியாயம் இருக்கு. ஆனால் வேலையும் செய்யாமல், சுழல் கதிரையும் கேட்டுக்கொண்டிருந்தவருக்கு. பிந்தி வரக்கூடாது எண்டு சொன்னால் அது பெரிய அவமானம் எண்டால் பாருங்கோவன்.
உவர் இந்த ஒப்பீஸில மட்டுமில்லை, இதுக்கு முதல் வலி.வடக்கு, வலி தென்மேற்குப் பிரதேசசபையிலையும் இவரின்ர வேலையின்ற வித்துவந்தால தான் அங்கையிருந்து இடமாற்றம் குடுத்து-நீபோனால் காணும் சாமி" எண்டு அனுப்பினவையாம். அந்தளவு அவருக்கு வேலைக்குப்பஞ்சி, ஆனால் வில்லங்கத்துக்கு பஞ்சமில்லையாம்...
(28.03.2024- உதயன் பத்திரிகை)
#eelamnews #srilankanews #jaffnanews #uthayannews #recentnews #breaking #newsupdate #புதினம்
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.