கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரித்தறிவதே மெய். எங்கள் எல்லாரிட்டையும் உந்த பிரைவேட் ஆஸ்பத்திரியள் சனத் தின்ற காசை வறுகுகிறதிலதான் குறியா இருக்குதுகள் எண்ட நினைப்பு இருக்கத்தான் செய்யுது. ஆனால் இப்ப ஒரு பிரைவேட் ஆஸ்பத்திரியில நடக்கிறதைப் பாக்கேக்க, இப்பிடி சனத்திட்ட கூடக்காசை அந்த ஆஸ்பத்திரிக்காரர் வாங்கேல. சிலர் வாங்க வைக்கினம் எண்டது அம்பலமாகியிருக்கு.
யாழ்ப்பாணத்தில் உள்ள பெரிய பிரைவேட் ஆஸ்பத்திரி அது. அரசாங்க ஆஸ்பத்திரிக்குப் போனா பெரும் அலைச்சல் எண்டிட்டு காசைக் குடுத்தாலும் வருத்தத்தை வேளைக்கு மாத்தவேணும் எண்டு நினைக்கிறவை வழமை மாதிரி அண்டைக்கும் உந்த பிரைவேட் ஆஸ்பத்திரிக்குப் போயிருக்கினம். இப்ப உந்த வெக்கையால எல்லா இடமும் கடும் காய்ச்சல் நடக்குது. அதால அண்டைக்கு அந்த பிரைவேட் ஆஸ்பத்திரி 'ஓ.பி.டி.யில அம்பது பேருக்கும் மேல வருத்தக்காரர் காத்திருந்திச்சினம். ஆனால் அவையைப் பார்க்க டொக்டர்மார் வரேலை. என்னெண்டு விசாரிச்சா பணிப்புறக்கணிப்பாம். அரசாங்க ஆஸ்பத்திரியளிலதான் உந்தப் பணிப்புறக் கணிப்புக் கோதாரி எண்டு பார்த்தால் இஞ்சயும் அந்த வருத்தம் தொத்திப்போட்டுதோ? எண்டு வருத்தக்காரர் எல்லாரும் அங்கையிருந்து போட்டினம்.
உந்தப் பிரைவேட் ஆஸ்பத்திரி டொக்டர்மார் ஏன் பணிப்புறக்கணிப்புச் செய்யினம்? வேற என்ன, எல்லாம் காசுதான். இப்ப அங்க தாறதைவிட எல்லாத்துக்கும் ரண்டு மடங்கா காசு வேணுமெண்டு நிக்கினமாம். கொழும்பில உள்ள பிரைவேட் ஆஸ்பத்திரி யளிலகூட ஒரு மணித்தியாலத்துக்கு டொக்டர்மாருக்கு 900 ரூபாதான் குடுக்கிறவை. இங்கையும் அதேயளவு காசுதான் இப்ப குடுபடுகுது. ஆனால் அது பத்தாதாம். மணித்தியாலத்துக்கு 1500 ரூபா வேணுமாம். அதைவிட போக்குவரத்து. மருந்து கட்டுறது. வருத்தக்காரரை வார்ட்டில பாக்கிறது, ஊசி போடுறது. எண்டு எல்லாத்துக்கும் இப்ப தாற காசை ரண்டு மடங்காத் தரவேணும் எண்டது தான் பணிப்புறக் கணிப்புக்காரரின்ர கோரிக்கையாம். ஆனால் கொழும்பிலயே இல்லாத அளவுக்கு இப்பிடி கொள்ளை யடிக்கிறமாதிரி காசைக் கேட்டால் நிர்வாகம் என்னெண்டு குடுக்கும்? ஒருவேளை அப்பிடிக் குடுத்தாலும், அந்தக் காசை வருத்தக்காரரிட்டத்தானே அறவிட வேணும். ஏற்கனவே காசுகூட வேண்டுகினம் எண்டு எல்லா இடமும் கதை. இப்ப அதைவிடக் கூட்டினால் சனம் கொந்தளிச்சுப் போடுமெல்லோ. அதால நிர்வாகம் டொக்டர்மாரின்ர உந்த அநியாயக் காசு வசூலிப்புக்கு சம்மதிக்கேலை. இப்ப எட்டு நாளா உந்தப் பணிப்புறக்கணிப்புத் தொடருதாம்.
வருத்தக்காரரை மனிசராப்பாக்காமல், காசெடுக்கிற ஏ.ரி.எம். மிஷின் மாதிரி பாக்கிற குணம் உள்ளவை எப்பிடி ஒழுங்கா மருத்துவம் பாப்பினம்? காசுக்காக என்னவும் செய்யவும் கூடுமெல்லோ. டொக்டர்மாரை தெய்வமா நினைச்சு சனங்கள் கும்பிட்ட கால மெல்லாம் பொய்யாகி,பழங்கதையாகிப் போட்டுது கண்டியளோ.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.