(பட்சி)
மறுபடியும் முதலில இருந்தா? எண்டுற மாதிரி, ஒருமாதிரிச் சீருக்கு வந்த வீட்டுக்கட்சியின்ர உள்வீட்டுப் பிரச்சினை. நேற்று நீதிமன்றப் படியேறி, சந்தைக்கு வந்திட்டுது. 19 ஆம் திகதி நடக்க இருந்த மாநாட்டுக்கு இடைக்காலத் தடையும் நீதிமன்றம் போட்டிருக்கு. இப்ப கூட்டுற கட்சியின்ர தேசிய மாநாடு சட்டவிரோதமெண்டும், இதுக்கு முதல் தெரிவு செய்த நிர்வாகத்துக்கு தடை போடோணும் எண்டும் ஒராள் திருகோணமலையில ஒரு வழக்கைப் போட்டிருக்கிறார். அதைக் கேட்டிட்டு நீதிமன்றமும் இடைக்காலத் தடை போட்டிருக்கு. அதைமாதிரி யாழ்ப்பாணத்திலையும் 19 ஆம் திகதி நடக்க இருந்த மாநாட்டுக்கு தடைபோடோணுமெண்டு இன்னொரு வழக்குப் போடுப்பட்டு. அதிலையும் மாநாட்டுக்கு இடைக்காலத் தடை விதிச்சிருக்குது.
இப்பிடி திருகோணமலையிலையும், யாழ்ப்பாணத்திலையும் சொல்லிவைச்ச மாதிரி ஒரே நாளில, இந்த வழக்குகளைப் போட்டது ஆரெண்டு எல்லாருக்குமே வடிவாத் தெரியும். கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லைத்தானே. வழக்குப் போட்டவையும், அந்த வழக்காளியள் சார்பில நீதிமன் றத்தில ஆஜரான லோயர்ஸ்மாரும் சுமந்திரன்ர ஆக்கள் எண்டதும் உள்ளங்கை நெல்லிக்கனியாத் தெரிஞ்ச விசயம். இப்பிடி வழக்குப் போடப்போயினம் எண்டால் அதைமுதலே போட்டிருக்கலாம். அதைவிட்டிட்டு, வருத்தம் மாறின கையோட எல்லா வேலையும் விட்டு வந்த சத்தியலிங்கத்தாரின்ர வீட்டில நாலைஞ்சு தரம் ரண்டு தரப்பும் கூடிக்கதைச் சதும், பிறகு ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்து கையெழுத் துப் போட்டதும் தேவையே இல்லாத ஆணியள் தான்.அங்காலிப்பக்கம் நாங்கள் இணைஞ்சிருக்கத் தயார் எண்டு வெள்ளைக்கொடி காட்டிக்கொண்டு, இஞ்சாலிப் பக்கத்தால் வழக்குப் போட்டு பிரச்சினை யைப் பெரிசாக்கிற வேலையைப் பார்த்திருக்கினம். சிலவேளையில இந்த வழக்குகளுக்கும் சுமந்திர னுக்கும் சம்பந்தமில்லாமல் கூட இருக்கலாம். சுமந்திரனில இருக்கிற அபிமானத்தில அவரின் தோல்விக்கு இப்பிடி வழக்குப் போட்டால் ஆறுதலா இருக்கும் எண்டு அவரின்ர அல்லக்கை யள் நினைச்சிருக்கலாம். அதால அவருக்கே தெரியாமல் திருகோணமலையிலையும், யாழ்ப்பா ணத்தி லையும் ஒரேநாளில வழக்குப் போட்டு 'சர்ப்பிரைஸ் கிப்ட் குடுக்க நினைச்சிருக்கலாம். ஆனால் சனம் என்ன நினைக்கும்? கட்சிக்குள்ள சிறீதரனுக்கோ. சுமந்திரனுக்கோ ஆதரவு குடுக்கா மல் நடுநிலையா நிக்கிறவை என்ன நினைப்பினம்? தலைவர் தேர்தலில தோத்துப்போன வெப்பியாரத் தில சுமந்திரன்தான் இப்பிடியெல்லாம் கட்சியைச் சீரழிக்கிற வேலையைச் செய்யிறார் எண்டுதானே எல்லாரும் முடிவுக்கு வருவினம்.
எண்டு ஒண்டிரண்டு கட்சி தமிழர்களுக்கு எண்டு ஒண்டிரண்டு கட்சி தான் உருப்படியா இருக்கு. அந்தக் கட்சியள் உருப்படி யான வேலையளைச் செய்யாட்டியும் சனம் அப்பிடி நம்பது. அந்த நம்பிக்கையிலதான் சனங்கள் ஏதோ ஒரு தீர்வு வருமெண்டும் காத்திருக்குதுகள். இப்ப இருந்த கட்சியையும் கோமாவில பருக்கச் செய்யிறள வுக்கு பழிவாங்கினால் கட்சியும் இல்லாமல், அரசிய லும் இல்லாமலும் தான் போகும். ஒரு தோல்வி என்னவெல்லாம் செய்யும்? எப்பிடி ஒரு அறிவாளி யைக் கூட கண்ணைமூடிக்கொண்டு வழக்குகளைப் போடவைக்கும் எண்டதுக்கு இந்த வழக்குகள் நல்ல உதாரணம் கண்டியளோ.
(16.02.2024 உதயன் பத்திரிகை)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.