(பட்சி)
என்னதான் 'மறப்போம் மன்னிப்போம்' எண்டு வெளியில சொல்லிக்கொண்டாலும், உள்ளுக்குள்ள 'பானிப்பூரிகாரருக்கு எங்களில கடும் வண்மம் தான். தொப்புள்கொடி உறவுகள் எண்டு சொல்லிச் சொல்லியே காலம் காலமா எங்கட முதுகில குத்துற வேலையை மட்டும் வடிவாப் பாக்கினம். அண்டைக்கு கம்பஸ்காரர் சாந்தன்ர 'பொடிய' எடுக்க போகாமல் நிண்ட விசயம் பற்றி சாடைமாடையாப் பட்சி சொன்னதெல்லோ. 'பொடியை எடுக்கப் போகவேண்டாம் எண்டு மட்டுமில்லை, அறிக்கையும் விடக்கூடாது எண்டு 'பானிப்பூரிக்காரர் கம்பஸ்காரரிட்ட கடுமையாச் சொன்னவை யாம். அதாலதான் ஒப்புக்குச் சப்பாணிக்கு ஒரு அறிக்கை விட்டவை. அந்த அறிக்கையில கம்பஸ் மாணவர் ஒன்றிய நிர்வாகக்காரர் ஒருத்தரின்ர சைனும் இல்லாமல், இறப்பர் ஸ்டாம்பும் இல்லாமல் ஏதோ மொட்டைக்கடிதம் மாதிரித்தான் கம்பஸ்காரரின்ர அறிக்கை வந்தது. முந்தியெல்லாம் துவக்கால சுட்டால் கூட துணிஞ்சு நிண்ட கம்பஸில இப்ப பானிப்பூரிக்காரர் 'ம்' எண்டு அதட்டினாலே கழிசாண் ஈரமாகுதாம். அந்தளவுக்குப் பயந்தடிக்கினம். அவை பயப்பிடுறதையும் குறை சொல்ல ஏலாது. எல்லாத்துக்கும் தங்களை விட்டால் ஆக்கள் இல்லை எண்டு மனக்கோட்டை கட்டுற ஆக்களே இந்தவிசயத்தில் பானிப்பூரிக்காரரின்ர காலில விழுந்து பிரதட்டை செய்யேக்க, கம்பஸ்காரர் என்ன செய்வினம்?
கம்பஸ்காரரோட பானிப்பூரிக்காரர் நிக்கேலை. அரசாங்கத்துக்கும் அழுத்தம் குடுத்து. சாந்தனுக்கு அஞ்சலி செய்யவிடாமல், 'பொடியை' கொண்டந்த உடனேயே எரிக்கிற மாதிரி, இழுத்தடிக்கிற வேலை பாத்தவை. ஆனால் அதுவும் ஒருகட்டத்துக்கு மேல சரிவரேலை. ஆனாலும் பானிப்பூரிக்காரர் அதோட அடங்கேலை. எல்லா அரசியல்வாதிமாருக்கும் வாயைமூடிக் கொண்டு கையைக் கட்டிக்கொண்டு இருங்கோ எண்டு தகவல் அனுப்பியிருக்கினம் எண்டும் கதை. அதால தான் தொட்டதுக்கெல்லாம் அறிக்கை, ஆர்ப்பாட்டம், செய்தியாளர் மாநாடு எண்டு இறங்கிற அரசியல் வாதிமார் கனபேர் சாந்தன்ர விசயத்தில கப்சிப்பா இருந்திருக்கினம். ஆனால் 'அன்ரோய்ட்' போனால ஆதவனை மறைக்க ஏலுமோ? இல்லைத்தானே. சனங்கள் தங்கட பாட்டில பெரிய எழுச்சியா வவுனியாவில இருந்து வடமராட்சி மட்டும் கண்ணீர் ஒழுக ஒழுக அஞ்சலி செய்ததுகள். அந்த அஞ்சலிகூட பானிப் பூரிக்காரருக்குப் பிடிக்கேலை. கிளிநொச்சியில பசுமைப் பூங்காவிலதான் சாந்தனுக்கு அஞ்சலிசெய்யிறதெண்டு முதல்ல ஏற்பாடு நடந்தது. ஆனால் பானிப்பூரிக்காரர் என்ன செய்திச்சினமோ தெரியாது, கரைச்சிப் பிரதேச சபை செயலாளர் அனுமதி தர ஏலாதெண்டு கைவிரிச் சிட்டாராம். அங்க ஏதும் முற்பதிவு இருந்தால் இல்லாட்டி நேற்று அங்க ஏதும் நிகழ்வு இருந்தால் அனுமதி குடுக்காமல் விடுறதில ஒரு நியாயம் இருக்குது.ஆனால் ஒரு காரணமும் இல்லாமல், சாந்தனுக்கு அஞ்சலிக்க ஏன் அனுமதி குடுக்கேலை எண்டு சபையின்ர செயலாளருக்குத்தான் வெளிச்சம். இத்தனைக்கும் பசுமைப்பூங்காவுக்கு 30 ஆயிரம் ரூபாகட்டவும் ஏற்பாடு செய்தவை தயாரா இருந்தவை. சபைக்கு வந்த வருமானத்தையும் விட்டு, சாந்தனுக்கு அஞ்சலி செய்யக் கூடாது எண்டதில குறியா இருந்த ஆரோதான் செய லாளருக்குப் பின்னுக்கு நிண்டு இயக்கி இருக்கினம். சிலவேளை உதுவே ராமர் சிலையைக் கொண்டந்தால் உடன அனுமதி குடுத்திருப்பினம்.
ஒரு நல்ல ஜீவனுக்கு அஞ்சலி செய்யிறதைக் கூட தடுக்கிறவை இருக்கிற நாட்டில எப்பிடி மழை இனிப் பெய்யும்?
(04.03.2024- உதயன் பத்திரிகை)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.