(பட்சி)
கண்ணால் காணுறதும் பொய், காதால கேக்கிறதும் பொய், தீர விசாரிச்சு அறியிறதே மெய் எண்டு சொல்லுவினம். அது இப்பத்தைப் பேஸ்புக் விசயத்தில மெத்தச்சரி. பேஸ்புக்கில ஏதும் ஒண்டைப் போட்டால் அதை உண்மையெண்டு நம்பிக்கொண்டு காவித்திரியிறது தான் இப்ப உலகநடப்பா மாறிட்டுது. ரண்டுமூண்டு நாளா பேஸ்புக்கில 'வல்வை முதியோர் இல்லத்தில பழைய சாப்பாடுகளைத்தான் குடுக்கினம்' எண்ட கணக்கில ஒரு வீடியோ சுத்திக்கொண்டு திரியுது. அதில முதியோர் இல்லத்தில இருக்கிறவைக்கு பழசான சாப்பாடு. அழுகின வாழைப்பழம் குடுக்கிற மாதிரியும். பிரிட்ஜூக்குள்ள வைச்ச சோத்தையே திரும்ப பானைக் குள்ள போட்டு அவிக்கிற மாதிரியும் அந்த வீடியோ ஓடுது. அதைப் பார்த்திட்டு எல்லாரும் பேஸ்புக்கில அந்த முதியோர் இல்லக்காரரை கரிச்சுக் கொட்டுகினம். ஆனாலும் அந்த வீடியோவில இல்லத்தின்ர நிர்வாகக்காரர் பழைய சாப்பாட்டைக் குடுக்கச் சொல்றமாதிரி ஒரு காட்சியும் இல்லை. அதோட ஒரு பெண் பணியாளர் கொஞ்சம் உரத்த தொனியில 'இந்தாங்கோ இதைச் சாப்பிடுங்கோ, நிர்வாகக்காரர் தாறதைத்தானே நாங்கள் தரலாம் எண்டு மூண்டு நாலு இடத்தில திரும்பத் திரும்பச் சொல்லுறதும், அந்த முதியோர் இல்லத்துக்கு கெட்டபேரை உண்டாக்கோணும் எண்டு வலிஞ்சு எடுத்த வீடியோவா இருக்குமோ எண்டு பட்சிக்கு பொறி தட்டிச்சு. உடன இல்லக்காரரோட பட்சி கதைச்சது.
அதையேன் கேக்கிறியள். நாங்கள் அப்பிடி கூடாத. பழைய சாப்பாடு குடுக்கிறேலை. கோயிலால புக்கை. குழைசாதம் வந்தால் அதைக் குடுப்பம். மற்றப்படி நாங் கள் அண்டண்டைக்குச் சமைச்சுத்தான் எல்லாம் குடுக் கிறது.இஞ்ச வேலைக்கு நிண்ட ஒண்டிரண்டு பேர் ஒழுங்கா வேலை செய்யேலை எண்டு பேசிப்போட்டன். அதுக்கு அவை அடுத்த நாள் 'தாங்கள் பணிப்புறக் கணிப்பாம்' எண்டிட்டு. இஞ்ச இருக்குற வயசான வைக்கு சாப்பாடு. தேத்தண்ணி குடுக்காமல் இருந்திட்டினம். பிறகு நான் தான் ரீ வைச்சு, பணிஸ் வாங்கி குடுத்தனான். இப்பிடி முதியோருக்கு சாப்பாடு போடமல் பணிப்புறக்கணிப்புச் செய்யிறவையை என் னெண்டு வைச்சிருக்கிறது. அதால இதைத் தூண்டி விட்ட ஆளை வேலையால போன 26 ஆம் திகதி நிப் பாட்டிப் போட்டம். ஆனா அவா தான் போகமாட்டன் எண்டு அடம் பிடிச்சவா. பிறகு பொலிஸுக்கு போய்த் தான் நாலைஞ்சு நாளைக்குப் பிறகு இஞ்சி இருந்து போனவா. அப்பிடி வேலையை நிப்பாட்டிப்போட்டம் எண்ட கோபத்தில தான். இஞ்ச நிண்ட நாலைஞ்சு நாளில இப்பிடி தானே பழைய சாப்பாடு, பழமெல்லாம்) குடுத்து வீடியோ எடுத்து போட்டிருக்கிறா எண்டு அந்த முதியோர் இல்லத்தின்ர தலைவரா இருக்கிறவா சொன்னா.
அப்பிடியெல்லாம் இல்லை. நாங்கள் மூண்டுபேர் முதியோருக்கு சாப்பாடு குடுக்காமல் பணிப்புறக்கணிப்புச் செய்தது உண்மை. அப்பிடியெண்டால் மூண்டுபேருக்கு மெல்லோ கடிதம் தந்து நிப்பாட்டியிருக்க வேணும். என்னை மட்டும் என்னெண்டு நிப்பாட்டுவினம்? நான் தான் அந்த வீடியோ எடுத்தனான். 26 ஆம் திகதிக்குப் பிறகுதான் எடுத்தன். ஆனால் நான் அதை வெளியில விடேலை. ஆர் பேஸ்புக்கில போட்டதெண்டு எனக்குத் தெரியாது. அந்தப் பழைய சோறு, அழுகின பழம் எல்லாம் அங்க இருந்ததுதான். இல்லாததை நான் எப்பிடி வீடியோ எடுப்பன்? எண்டு வேலையை விட்டு நிப்பாட்டுப்பட்ட பராமரிப்பு வேலை செய்தவா சொன்னா. ரண்டுபேர் சொன்னதையும் வைச்சுப் பாக்கேக்க -உங்களுக்கு எது உண்மையெண்டு தெரியுதுதானே?
(05.03.2024- உதயன் பத்திரிகை)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.